Friday, December 31, 2010

காத்திருப்பு...!!!


வார நாளின் ஒரு சாதரணமான நாள், கொடுக்கப்பட்ட அலுவலை செய்து முடித்துவிட்டு, என் மின் அஞ்சலை திறந்து பார்த்து கொண்டிருந்தேன். தோழர், தோழிகளின் நல விசாரிப்புக்கள், அவர்கள் செய்யும் செயல்கள், மற்றும் இன்ன பிற விஷயங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தனர். தோழி ரம்யாவின் (அம்மு என்று நான் அழைப்பேன்) செய்தி, அவளது சகோதரன் (மணிகண்டன்), என்னுடைய நண்பனும் கூட, திருமணச் செய்தி. சந்தோஷமான செய்தி. 12 Sept 2010, Sunday, கோயம்புத்தூர்யில் - அவனது திருமணம்.



இச்செய்தி, என்னை பின் நோக்கி அழைத்து சென்றது. என் குழந்தைப் பருவ பள்ளிக்கூட வாழ்க்கை நினைவில் வந்தது. அவள், தன் சகோதரன், பெற்றோர்களுடன் எங்கள் வீட்டின் அருகில் வசித்து வந்தனர். அவள் - அம்மு என்னை விட ஒரு வயது மூத்தவள், அவளின் சகோதரன் – மணி என்னை விட ஒரு வயது இளையவன். அனைவரும் ஒரே பள்ளியில் பயின்று வந்தோம். வீட்டின் அருகாமையில் இருப்பதால், எங்களின் நட்பு பள்ளியிலும், வீட்டிலும் தொடர்ந்தது. எனக்கு, இந்த நட்பு நெடுங்காலம் தொடரும் என்னும் எண்ணம் இல்லை, இது உண்மை. நான் பொய் சொல்ல விரும்பவில்லை. காரணம், நட்பு என்றாலே என்ன என்று அறியாத இளம் குழந்தை பருவம்.


இருப்பினும், நாங்கள், அனைவரும் சேர்ந்து பள்ளிக்கு செல்வோம், மதிய உணவு உட்கொள்வோம், விளையாட்டும் அப்படியே. என் அம்மா, நன்றாக அசைவ உணவுகள் செய்வாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என் தந்தை மீன், நண்டு வாங்கி வருவர். அம்முவுக்கு நண்டு என்றால் கொள்ளை பிரியம். என் அம்மா கொஞ்சம் காரமாக சமைத்து, எங்கள் அனைவரும் சேர்த்து ஊட்டிவிடுவாள். கவலைகள் அறியா பருவம்.


சிறிது வருடங்கள் கழித்து, அவளின் தந்தையின் அலுவல் காரணமாக வேறு ஊர் மாற்றலாகி சென்றனர். இளம் வயது என்பதால் எனக்கு, என்ன செய்வது என்று தெரியவில்லை, மேலும் புதிய நண்பர்களின் அறிமுகம். இருந்த போதிலும், என் பெற்றோரும் அவளுடைய பெற்றோரும் தொடர்புடன் இருந்து வந்தனர். வீட்டின் விசேஷங்களுக்கு அழைப்பது, முக்கிய விஷயங்களை பரிமாறிக்கொண்டனர்.


14 Sept 1994 வருடம், என் மூத்த சகோதரியின் திருமணம். நான் 8-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கிட்ட தட்ட 10 வருடம் கழித்து என் தோழியையும், தோழனையும் பார்க்கும் வாய்ப்பு. அப்போதும் இளம் பருவம் என்பதால், நான், அவர்களின் பெற்றோர்களுடன் தான் அதிகம் (!?) பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள், கோவையிலிருந்து திருமணத்திற்காக வந்திருந்தனர்.



சில மணி நேரங்கள், அவ்வளவு தான். பின் பல வருடங்கள் கடந்து போயிற்று. என் தந்தை மறவாமல் ஒவ்வொரு வருடமும், புத்தாண்டு வாழ்த்து செய்தி அனுப்புவர். அவர்களும் அப்படியே, தொலைப்பேசி தொடர்பும் இருக்கும்.



2003 ஆம் வருடம், நான் அப்போது என் இளங்கலை பட்டம் முடித்த வருடம், நான் ஒரு கூடைபந்தாட்ட போட்டிக்காக, கோவை செல்லும் சந்தர்ப்பம். என் அம்மாவிடம் அவர்களின் தொலைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டு சென்றேன். அங்கு நான் சென்றவுடன், தொலைபேசியில் அவளின் தாயாருடன் பேசினனேன், அவர்களும் என்னை அவர்கள் இல்லம் வருமாறு கேட்டுக்கொண்டாள். பல வருடம் கழித்து அவளையும், அவளது பெற்றோரையும் சந்திக்கப் போகும் எண்ணம், புதுமையான ஒரு உணர்வாக இருந்தது.



பேருந்து பிடித்து, பேருந்து நிறுத்தம் சென்று சேர்ந்தேன், சில மணித்துளிகளில், வெள்ளை நிற சுடிதார் அணிந்துக் கொண்டு, என்னைப் பார்த்து கை அசைத்தபடி, அவள். இன்பமான அதிர்ச்சி. சந்தோஷம். இருவரும், பேசிக்கொண்டே, அவர்களின் இல்லம் நோக்கி நடந்தோம். எங்களுக்குள் நடந்த உரையாடல்கள் இன்றும் என் நினைவில், அந்த மணித்துளிகள் என் மனத்தில் பசுமையாய்... சில மணித்துளிகளில் இல்லம் சென்று அடைந்தோம். அவள், அம்மா என்னை அழைத்து, நல விசாரிப்புகள், பள்ளிப் பருவத்தில், நானும் அவர்களின் வீட்டில் உணவு உட்கொள்வேன். அன்றும், ரசம் சாதம், அன்புடன்.



நல விசாரிப்புகள், என் எதிர்காலம் என பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்தது. அப்போது அவளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்த சமயம். அவள் என்னிடத்தில் தன்னுடைய கனவாளனின் புகைப்படத்தை காட்டினாள். பின் அவளது திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்றும் அன்பு கலந்த கண்டிப்புடன் கேட்டுக்கொண்டாள். எனக்கு அன்புடன், குளிர்பானம் தயாரித்தும் கொடுத்தாள்.



சின்ன மன வருத்தம், என நண்பனை காண இயலவில்லை. வெகு நேரம் அவர்களுடன் உரையாடிவிட்டு, அவளின் திருமணத்திற்கு வருவேன் என வாக்குறுதி அளித்துவிட்டு விடைபெற்று செல்ல முற்பட, சின்ன குடுவையில் தண்ணீர் கொடுத்து அனுப்பினாள், (அந்த குடுவையை வெகு நாட்கள் அவளின் நினைவாக நான் பாதுகாத்து வைத்திருந்தேன்), பின் கூடைப்பந்தாட்ட போட்டிக்கு சென்றேன்.


01 Nov 2003, அவளின் திருமண நாள், எதிர்பாராத விதமாக என்னால் அவளின் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. என் பெற்றோர்கள் சென்று வந்தனர்.
வருடங்கள் ஓடின, எங்களின் நட்பு, மின் அஞ்சல் மூலமாக தொடர்ந்தது. அவ்வப்போது, இணையத்தில் பேசியும் கொள்வோம். அதன் விளைவாகவே இன்று நான் பெற்ற, அவளின் சகோதரனின், எனது நண்பனின் திருமண நிகழ்ச்சி அழைப்பு.



நான், கண்டிப்பாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பினேன். நான் இப்போது சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஆகையால், சென்னையில் இருந்து, எனது சொந்த ஊர் புதுக்கோட்டை சென்று, என் பெற்றோருடன் கோவை செல்லலாம் என நினைத்தேன். என் பெற்றோரும் அதற்க்கு சம்மதம் அளித்தனர். நானும், என்னுடைய பெற்றோர்களும் புதுகையில் இருந்து கோவை சென்று அடைந்தோம். எனக்கு நன்கு தெரியும், அவர்கள் எங்களுடன், அதிக நேரம் இருக்க முடியாது என்று, இருப்பினும் அவர்களை காண வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அங்கு சென்று இருந்தோம்.



மண்டபம் சென்று அடைந்து, அவளையும், அவளின் குடும்பத்தினர் அனைவரையும் சந்தித்து சில மணித்துளிகள் பேசி மகிழ்ந்தோம். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். விடை பெறும் நேரமும் வந்தது. பிரியா விடைப் பெற்றுக்கொண்டு வந்தோம்.



விடை பெற்ற நொடியோ... இன்னும் என்னுள் விடைபெறாமல்...



கோவையிலிருந்து, இரவு பயணம் பேருந்தில்... ஜன்னல் ஓர இருக்கை, நெரிசல் இல்லாத சாலை, இதமான குளிர்ந்த காற்று... பெருவாரியான பயணிகள் உறங்கிக்கொண்டிருக்க, என்னை என் நண்பர்களின் நினைவுகள் ஆட்கொண்டன...



நிஜங்களை விட நினைவுகள் தான் இனிமையானவை.....



காலங்கள் கடந்து போகும் நேரத்தில், நான் கண்ணீரோடு திரும்பிப் பார்க்கிறேன் நாம் பழகிய நாட்களை... மீண்டும் வருமா என்று...

நம்பிகையுடன் அந்த நாளை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அன்பு சிநேகிதன்......

Monday, September 20, 2010

நடந்தவை....

புதிய பணியிட மாற்றம் காரணமாக, எனக்கு பல நாட்கள் ஓய்வு கிடைத்தது.
சென்னையில் இருந்து சொந்த ஊர் புதுக்கோட்டை செல்ல பயணம் மேற்கொண்டேன். பயணம் செய்வது எனக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று. அதிலும் ஜன்னல் ஓரம் உட்கார்ந்துக் கொண்டு எதிர் காற்றை அனுபவித்து, புத்தகம் படிப்பதென்றால் கொள்ளை பிரியம். சக பயணி ஒருவன் அவனது கைபேசியில் மிக இதமான திரைப்பட பாடல்களை ஒலியிட, அட அட என்ன ஒரு ஆனந்தம். அதுவும் இந்த முறை, பகல் பயணம் வேறு.


மிக ரம்மியமாக இருந்தது. நான் ஹோசே மார்த்தியின் ‘எளிய கவிதைகள்” படித்து கொண்டு வந்தேன். 8 மணி நேர பயணம் மிக அருமையாக அமைந்தது. மாலை வீடு வந்து சேர்ந்தேன்.


மறுநாள் காலை, 1 ½ மணி நேரப் பயணம் மேற்கொண்டேன், புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு, தோழியின் பிறந்தநாள், நண்பர்கள் அனைவரும் சந்தித்து வாழ்த்துக்கள் கூறினோம். பரிசுகள் பரிமாற்றம், உணவகத்தில் உணவு அருந்திவிட்டு, நண்பர்கள் அனைவரும் என் தாய், தந்தையரை சந்தித்தோம். பின் நண்பர்கள் அவர் அவர் அலுவல்களை செய்ய பிரிந்து சென்றனர்.


நான் என் பெற்றோர்களுடன், 7 மணி நேர பயணம் மேற்கொள்ள முற்பட்டேன், திருச்சியில் இருந்து கோயம்புத்தூர். இந்த முறையும் பகல் பயணம். மேலும், 2 வயது கைக்குழந்தை, என் சகோதரியின் மகன், அவனுக்கு பால் கொடுப்பது, அவனை தூங்கச்செய்வது, விளையாட்டுக் காட்டுவது என நேரம் கடந்து கொண்டிருந்தது.


இரவு தோழனின், திருமண விழா, பல வருடங்கள் கழித்து அவனை பார்க்க முடிந்தது. அவனுடன் சில மணித்துளிகள், அனைவரும் இரவு உணவு அருந்திவிட்டு ஓய்வு எடுக்க சென்றோம். ஆனால் என்னால் ஓய்வு எடுக்க இயலவில்லை. என் பெற்றோர்கள், குழந்தையுடன் ஓய்வு எடுக்க, நான் என் நண்பர்களுடன் கைபேசியில் வெகு நேரம் உரையாடினேன். பின் மறுநாள் நடக்க இருக்கும் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், உறங்கச் சென்றேன்.


திருமண முகுர்த்தம் விடியற்காலை என்பதால், வெகு சீக்கிரமாக எழுந்து அனைவரும் தயாரானோம். திருமணம், வெகு இயல்பாக விமர்சையாக நடந்து முடிந்தது. நண்பர்கள் பிரிய, இதயம் கனத்தது.


மறுபடியும், 7 மணி நேர பயணம் மேற்கொள்ள முற்பட்டேன், கோயம்புத்தூர் – திருச்சி. இந்த முறை இரவு பயணம், என் பெற்றோர்கள், கைக்குழந்தையுடன். என் அம்மா, அவளுடைய பேரனை மிக கவனமாக பார்த்துக்கொண்டாள்.
அவளும், எங்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த போதிலும், கண் அயராமல் குழந்தையை கவனித்து கொண்டு வந்தாள். இதுபோல் எத்தனை நாள் தன் தூக்கத்தை எனக்காக தொலைத்தாலோ தெரியவில்லை. என் கண்கள் கலங்கின.. குழந்தையை சமாளிப்பது, வளர்ப்பது ஒரு பெரிய கலை போலும். அத்தருணத்தில் தாய்மையின் பொறுமை, கவனம், அன்பு, சகிப்புத்தன்மை அனைத்தையும் உணர முடிந்தது, மிக வித்யாசமாக பயணமாக அமைந்தது.



மிக சோர்வாக வீடு வந்து சேர்ந்தோம், பயணம் தந்த உடல் அசதி, நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சி, உறக்கம் தேவைப்பட்டது. உறங்கச் சென்றோம். அதிகாலை, தோழி, இளைய சகோதரியின் குறுஞ்செய்தி, அவளும் என்னை பார்க்க ஆவலுடன் என் அறை வந்தாள். மிக சோர்வாக நான் உறங்கிக்கொண்டிருக்க, அவளோ, என்னை தன் மடியில் கிடத்தினாள். மிக மெதுவாக என் கரங்களை அழுத்திவிட்டாள். நான் அவளின், அருகாமை, அன்பு, ஸ்பரிசம் அனைத்தையும் உளமார ரசித்து கொண்டிருந்தேன்.


அப்பொழுது மெல்லிய ஒலியில் திரைப்பட பாடல்
ஒலித்துக் கொண்டிருந்தது -
“தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவாயில்லை....”


நான் பாக்கியசாலி, என் மீது அந்த கடவுளுக்கு அதிக அன்பு போலும். இந்த விலைமதிப்பற்ற, எதிர்ப்பார்ப்பு இல்லாத இவ்வுறவை என்னவென்று நான் உணர்ந்து சொல்ல? நம் நண்பர்களை நாம் தேர்ந்து எடுக்க முடியும். ஆனால் சகோதரி, சகோதர்களை? இந்த உறவு, கடவுள் நமக்கு பரிசாக அள்ளிக்கொடுப்பது.

அக்கா...

09 Sept 2010, Thursday
வழக்கமான வார நாளின் ஒரு நாள், புதிய பணி, புதிய இடம், புதிய அலுவலக நண்பர்கள், சவாலான வேலை... புதிய பணியின் காரணமாக புதிய விஷயங்களில் அதிக ஆர்வம், மனதளவில் பெரிய மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டிருன்தது. இருபினும் என் நண்பர்களின் நினைவுகள் எப்போதும் போலவே என் மனதில்....


அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல நான்கு சக்கர வாகனம் என் அறை வந்து அடைந்தது. அதிகாலை நேரம், நெரிசல் அற்ற அகன்ற சாலைகள், இதமான மெல்லிய ஈர காற்று... வாகனத்தில் மெல்லிய ஒலியில் மனதை வருடும் திரைப்படப் பாடல்... மனதுக்கு மிக இதமாக.

“மந்திர புன்னகையோ, மஞ்சள் நிலவோ கண்ணே... கண்ணே...”


பின் இரவில் நான் என் அக்காவுடன் கைப்பேசியில் உரையாடிய விஷயங்கள் என் நினைவில். ஆம், என் அக்கா, கூடப் பிறந்தவளோ, பெரியப்பா மகளோ, சித்தப்பா மகளோ என ஐயம் வேண்டாம். கூடப் பிறந்தால் தான் அக்கா என்று அழைக்க வேண்டுமா? நான் அப்படி கருதவில்லை.


அவளுக்கும் எனக்கும் இடையான அறிமுகம் 28 Feb 2010, ஞாயிற்றுக் கிழமை, மாலை நிகழ்ந்தது. மிக சரியாக சொன்னால் 221 நாட்களாக அவள் என்னுடன் அருகாமையில் வசித்து வந்தாள். குறுகிய காலமாக இருந்தாலும் எங்களுக்கு இடையான புரிதல், அன்பு, இறுக்கம் அசாதாரமானதாக இருந்தது, இருக்கின்றது.


அவளின் நினைவுகள் இப்போது வந்த காரணம், என செவிகளை வந்து அடைந்த பாடல் வரிகள்.


அலுவலகம் சென்று அடைந்து, என் பணிகளை செய்துகொண்டிருந்தேன். என் அக்காவின் நினைவுகள் அலுவலக வேலையின் காரணமாக அந்நியமாக தள்ளி இருந்தது.


அலுவக நண்பனின் கைப்பேசி அழைப்பு.
“கமல், check your mail box”
“சரி”. அழைப்பு துண்டிக்கப்பட்டது.


என் மின் அஞ்சலை திறந்து பார்க்க, இன்பமான அதிர்ச்சி. என்னை, அலுவலக வேலை நிமித்தமாக ஆஸ்திரேலியா செல்லும் படியான செய்தி. கிட்ட தட்ட ஒரு மாத காலம் அங்கு தங்கும் படியான சூழல்.


இந்த செய்தியை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அனைவருக்கும் மகிழ்ச்சி. அனைவரும் விருப்பத்துடன், என் தேவைகளுக்கான பொருட்களை சேகரிக்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். உறவுகளிடம் கேட்டாலும் கிடைக்காத ஒத்துழைப்பு, நண்பர்களிடத்தில் கேட்காமல். அவகளின் அன்பில், பாசத்தில், பண்பில், ஒத்துழைப்பில் திக்கு முக்காடிப் போனேன்.


நான் ஆஸ்திரேலியா செல்லும் நாளும் வந்தது, அனைத்து நண்பர்களும் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர். அவர்களின் பிரிவை 30 நாட்கள் எப்படி சமாளிப்பது என்பதை அறியமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். மேலும் அக்காவை நேரில் காண இயலவில்லை என்ற மன வருத்தம்.


விமானம் மெல்ல மெல்ல மேல செல்ல, எங்கும் அமைதி. நான் என் நண்பர்களின் நினைவில்...


நேரம் கடந்து கொண்டிருந்தது, கடந்து போன நேரம் தெரியவில்லை, அதை அறிய முற்ப்படவும் இல்லை.


விமான ஓட்டுனரின் அறிக்கை –
“Dear passengers, due to technical problem the flight is landing at Andaman. It takes 4 to 5 hr to resolve the problem. Until that passengers will be given proper accommodation & food by the management. If passenger wishes they can hang out. Delay can be kindly regretted.”


அனைத்து பயணிகளும் சற்றே வெறுப்புடன், சிற்சில முனகலுடன் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். எனக்கோ இன்ப அதிர்ச்சி, ஆம் என் அன்பு அக்கா இங்கு தான் வசித்து வருகிறாள். அவளை பார்த்து சரியாக 62 நாட்கள் கடந்து போயிற்று. நான் ஆவலுடன் என் கைப்பையில் உள்ள தின்பண்டங்களை எடுத்துக் கொண்டு விமான நிலையம் விட்டு வெளி வந்தேன்.


மூன்று சக்கர வகானம் பிடித்து அவள் வீடு செல்ல முனைந்தேன். சற்றே சிரமத்திற்கு உள்ளானனேன். நான் பேசும் மொழியை அவன் புரிந்து கொள்ளவில்லை. பின் ஏதோ எனக்கு தெரிந்த ஹிந்தி பேசி சமாளித்தேன்.


20 நிமிடப் பயணம்... என் மனம் என் வசம் இல்லை. எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள் – “ஆக்க பொறுத்த சாமிக்கு ஆற பொறுக்கல”. ஆம், இப்போது என் நிலையும் அதுதான். வீடு சென்று சேர்ந்தேன். அவள் மாடி வீட்டில் உள்ளாள். நான் மிக மெதுவாக சென்று, அழைப்பு மணியை அழுத்த...


“koun”


நான் அமைதி காக்க, அவள் எட்டிப் பார்த்து இன்ப அதிர்ச்சியுற்றாள், நானும்.
சுற்றத்தினை இருவரும் பொருட்படுத்தவில்லை, இருவரும் கட்டி அனைதுக்கொண்டோம். இருவரும் நேற்றிலும், கன்னங்களிலும் முத்தங்களை பரிமாறிக்கொண்டோம்.


எது அவசியம்? எல்லாம் அவ்வளவு தெளிவாகத் தெரிந்து விடுவதில்லை. ஆனால் அந்தந்த சமயங்களுக்குக் என்ன செய்கிறோமோ அதெல்லாம் அவசியம். பிடிதமிலாதவைகளைக் கூடச் செய்கிறோம். அதைச் செய்து பிடிதமான, அவசியமான, பெரியது ஒன்றை அடைய... (விடுதலை – குறுநாவல், புதுமைப்பித்தன்).


கவி வைரமுத்துவின் வரிகள் என் நினைவில் –
சொல்லின் அர்த்தம் தீர்மானிப்பது சொல் அல்ல – இடம்.
ஒரே ஒரு முத்தம் கொடு – இந்தத் தொடருக்குக் கட்டிலில் பொருள் வேறு, தொட்டிலில் பொருள் வேறு, பாடையில் பொருள் வேறு.”


ஆம், எங்கள் செயலில் சிறுதுளியும் கொச்சையான எண்ணங்கள் இல்லை.


நான் உணர்ந்த விஷயங்கள் மூன்று – 1.அன்பு 2.நேசம் 3.பாசம்

முத்தம் அன்புடன் கொடுக்க பட வேண்டும், அன்புடன் பெறப்பட வேண்டும்.


மார்தியின் “எளிய கவிதைகள்” வரிகள் –
“வெயில் பட்ட செம்பாய்க் கொதித்தது அவள் நெற்றி
விடை பெறக் கடைசியாய் நான் முத்த்தமிட்ட பொழுதில்
வாழ்நாள் முழுவதும் வெறித்தனமாக
நான் நேசித்தது – அந்த நெற்றி ஒன்று தானே...!!! “


பின், வழக்கமான உரையாடல்கள், செல்ல சண்டைகள் என நேரம் கடந்து கொண்டிருந்தது. நான் அவளின் மடியில் படுத்துகொண்டிருக்க, அவளின் கைகள், என் தலை கேசத்தை அன்புடன் வருடிக்கொண்டிருந்து.



மீண்டும் ஒரு முறை மார்தியின் “எளிய கவிதைகள்” வரிகள் –
“துயர் படவும் தாங்கவும் செய்கிறாய் எனக்காக
பரந்த உந்தன் மடியில் விட்டுச் செல்கிறேன் எந்தன்
ஒவ்வொரு காயத்தையும் ஒவ்வொரு அடியினையும்
வலி மிகு ஆழ்ந்த அன்பினையும்...!!!”


எங்களின் உரையாடல், எங்கள் நண்பர்கள், அவர்களை பற்றிய விஷயங்களாகவே இருந்தது, நேரம் கடந்து கொண்டிருந்தது.


சிறிது நேரம் செல்ல, அக்கா எனக்கு பிடித்த தக்காளி சட்னி மற்றும் தோசையுடன் வந்தாள். நான் சாப்பிட, அதிதமான அன்புடன், எனக்கு ஊட்டியும் விட்டாள்... அவளின் அன்பை என்வென்று நான் உரைக்க....
கடல் போன்று மிக ஆழமானது என்றா?
நீல் வானம் போன்று மிக பரந்தது என்றா?
மழை போன்று பொழிவது என்றா?
தெரியவில்லை... புரியவுமில்லை...


நேரம் ஆயிற்று. விமான நிலையம் செல்ல முற்பட, என் நெற்றியில் திருநீர் இட்டு, அவளும் என்னை வழி அனுப்ப விமான நிலையம் வந்தாள். மீண்டும் ஒரு முறை நெற்றியில் முத்தம் இட்டாள்.


விமானம் மெல்ல மெல்ல மேல செல்ல, எங்கும் அமைதி. நான் என் நண்பர்களின் நினைவில்... நான் எப்போதோ வாசித்த வாசகம் -


காலத்தின் கட்டாயம் என்னை
கலங்கவைக்க வேண்டுமென்று

அழுகிறேன் மனதிற்க்குள்
அன்பு நண்பர்களே உங்களை எப்படி பிரிவது

உயிர் பிரிவதை போன்று உணர்கிறேன்
உங்களை பிரியும்போது

எப்பொழுதும் சிரிக்கும் நான்
இப்பொழுது அழுகிறேன்

என்னுயிர் நண்பர்கள்
என்னைவிட்டு செல்கிறார்கள்

தடுக்கவும் வழிஇல்லை வழியனுப்பவும் மனமில்லை
கனத்த மனதோடும் கண்ணீரோடும் திரும்பி வருகிறேன்

என் வாழ்க்கை பயணத்தை தொடர...

Tuesday, September 7, 2010

ஒரு கூட்டுக்கிளிகாளாய்....




அக்காவுக்கு ஒரு சேலை வாங்கும் பொருட்டு நானும் என்னுடைய நண்பர்களும் கடை வீதி சென்று இருந்தோம். எனக்கு இது புதிய அனுபவம், விஷயம். என்னுடைய தோழிகள் அந்த வேலையை செம்மையாக செய்து கொண்டு இருந்தனர். வெகு நேரம் ஆயிற்று ஒரு சேலையை தேர்வு செய்ய.


நல்ல வேலையாக, சேலை தேர்வு முடிவுற்றது. அனைவரும், உணவகத்தில் உணவு அருந்திவிட்டு தங்கும் இடம் வந்து சேர்ந்தோம்.


வேலை தந்த அசதி, அலைச்சல், நல்ல உறக்கம் தேவைப்பட்டது. கேட்டுக் மெல்லிசை கொண்டே கண் அயர்தேன். எப்போது உறங்கினனேன் என்று தெரியவில்லை.


விடியற்காலை, விசாலமான பெரிய அறை, என் காதுகளை எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் சுப்ரபாதம் வந்து அடைந்தது, ஒலித்தது. காலை நேர பரபரப்பு...


என் மடியில் அதிகாலை சோம்பலுடன், மிக அதிதமான அன்பு மற்றும் உரிமையுடன் என் தோழி, சகோதரி, மூத்த மகள், லக்ஷ்மி...

என் மகன், என் தோழியிடம்,

“ நீ எந்திரி, இது எங்க அப்பா, நா தூங்க போறேன்”

“ போடா, இது எங்க கமல்”
செல்ல சண்டை அவர்களுக்குள், நான் ரசித்துக்கொண்டிருக்க,


தோழன் செந்தில் என்னிடம்,
“கமல், அம்மா (கமல்) ஊர்லேந்து வாராங்கலாம், நான் கார் எடுத்து போயிட்டு அழைச்சுட்டு வந்துரேன்”

“எப்படா சொன்னாங்க?”

“உனக்கு போன் செஞ்சகலாம், not reachable la இருந்தியாம், அதான் எனக்கு போன்ல சொன்னாங்க”


அப்போது, என்னவள், என்னிடம்
“நான் மார்கெட்க்கு போகணும், அக்கா காய்கறி வாங்கிவரச் சொன்னாங்க, அழைச்சுட்டு போங்க...”

“இல்ல, எனக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, இப்போ முடியாது”

“சரி, நான் செந்தில் அண்ணாவுடன் போறேன், செந்தில் அண்ணா, ரயில்வே ஸ்டேஷன் போற வழில என்ன ட்ராப் பண்ணிடுங்க, திரும்ப வரும் போது அழைச்சுட்டு போங்க...” என்றாள் மிக உரிமையுடன்.

“உன்ன அழைச்சுட்டு போக முடியாது” என்றான் கிண்டலுடன் செந்தில்.

அவன் வார்த்தைகளை என்னவள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

தோழன் செந்தில் முன்னே செல்ல, அவள் பின் தொடர்ந்தாள்.


“மாமா, அம்மா இந்த பாடம் சொல்லிக் கொடுக்க மாட்றாங்க, நீங்க சொல்லிக் கொடுங்க” என்று கூறிக்கொண்டே என்னிடம் வந்தாள், என் அன்புத் தோழி செல்வியின் மகள்.

“வாடா செல்லம் நா சொல்லித் தரேன்” என்றேன் அவளை கட்டி அணைத்தபடி.

“அம்மா, காயத்ரி.... காயத்ரி...”

அதிகாலை நேர சோம்பலுடன், என் தோள்களில் சாய்ந்துக் கொண்டு,
“என்ன அண்ணா”

“இன்னைக்கு ஆபீஸ்க்கு லீவ் சொல்லு டா, அம்மா வாராங்க...”

“சரி”
அங்கு, என் மகளுக்கும் தோழி செல்விக்கும் வாக்குவாதம் –

“போ அத்த, நீ ஒன்னும் தல சீவிவிட வேண்டாம், நா லக்ஷ்மி அத்த கிட்ட போறேன்” என்று கோபித்துக்கொண்டு துள்ளிக் குதித்து ஓடினாள்.

“கமல், உங்களுக்கு ஆபீஸ்ல ஒரு மீடிங்னு சொன்னீங்கள, நீங்க என் பைக்ல போங்க. உங்க பைக்ல ஏதோ ப்ரோப்ளேம்ன்னு சொன்னீங்க, நா போற வழில சரி செஞ்சு evening எடுத்திட்டு வாறேன்” என்றார் அன்புத் தோழி செல்வியின் கணவர்.


அடுப்படியில் இருந்து சாந்தி அக்கா,
“கமல், இங்க வந்து பாரு, பசங்க அட்டகாசம் பண்றாங்க, என்னனு கேளு”

“நா சொன்ன கேட்கவா போறாங்க, சதீஷ், நீ போய் என்னு கேளு, நீ சொன்னாதான் பசங்க பயபடுவாங்க,கேட்பாங்க...”


அப்போது, அப்பா (செந்தில்) –
“கமல், பேரனுக்கு உடம்பு சுடுது, ஹாஸ்பிடல் கூட்டிட்டு போப்பா”

“சுபா, ஏன்? என்ன ஆச்சு? நேத்து ராத்திரி கூட நல்ல இருதான்ல”

“ஆமாண்ணா... இப்போ கொஞ்ச நேரமா உடம்பு சுடுது,”

லக்ஷ்மி இடைமறித்து, “ நீங்க ஆபீஸ் போங்க, நா ஆபீஸ் போகல, லீவ் சொல்லிருக்கேன், நான் அழைச்சுட்டு போறேன்”

சதீஷ், குழந்தைகளை சமாளித்து, காலை வேலைகளை செய்து கொண்டு இருந்தான்.


நான் ஆபீஸ் செல்ல முற்பட, அக்கா –
“டேய், சாப்பிட்டு போ, உட்காரு. எப்ப பாரு இதே வேலையா போச்சு உனக்கு” என்று மிக அன்பான, பொய்யான கோபத்துடன், தட்டில் இரண்டு தோசையுடன் எனக்கு பிடித்த தக்காளி சட்னியுடன் வந்தாள். அவளின் அன்பான வார்த்தைகள் என்னை சிதைக்க, நான் அமர்ந்தேன். அவள் மிக உரிமையுடன், மென்மையாக, வாஞ்சையுடன் என் கன்னங்களை தடவி விட்டாள்.

அப்போது, தோழன் செந்திலின் மகன் –
“பெரியப்பா, எனக்கு மம்மு” என்று கேட்டுக்கொண்டே, என் கழுத்தை கட்டிக்கொண்டு, முதுகில் தொற்றிக்கொண்டான்.

"இந்தாடா செல்லம், ஆ சொல்லு”


நான், அவனுக்கு உணவளித்துக் கொண்டும், சாப்பிட்டு கொண்டிருந்த போது, தோழன் செந்திலின் துணைவி,
“அண்ணா, நானும் இன்னைக்கு உங்ககூட வந்துரேன், என்ன ஆபீஸ்ல ட்ராப் பண்ணிடுங்க” என்றாள் உரிமையுடன்.
நான் தலை அசைத்தேன். அவளிடம் தட்டை நீட்டி,

“நீயும் எடுத்து சாப்பிடு. அக்கா இன்னம் இரண்டு தோசை...”
அவளும், தோசையை, சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மேலும்

“அக்கா, மூணு தோசை கொண்டு வாங்க, ரொம்ப பசிக்குது” என்றாள்.
செல்வி, என்னிடமும், செந்திலின் துணைவிடமும்

“இரண்டு பேரும், மறக்காம டைன்னிங் டேபிள் உள்ள லஞ்ச் பாக்ஸ்ச எடுத்திட்டு போங்க” என்றாள் அக்கறையுடன்.


கோவில் சென்று திரும்பிய அம்மா (செந்தில்), பாசத்துடன் அனைவருக்கும் திருநீர் பூசிவிட்டு, அலுவலகம் செல்ல தயராக இருந்த எனக்கும், சகோதரிக்கும் (செந்திலின் துணைவி) நெற்றியில் முத்தம் இட்டாள்.

“அம்மா, செல்வி எங்களுக்கு டீ போட்டு கொடும்மா” என்று கேட்டுக்கொண்டே வாக்கிங் போய் திரும்பிய அப்பா (கமல் & சதீஷ்) இருவரும்...


அப்போது, காலிங் பெல் சத்தம் கேட்டு, எட்டிப் பார்த்தேன், அது காலிங் பெல் சத்தம் அல்ல, என் கடிகார கதறல்...



நடந்தவை எல்லாம் கனவா? நனவானால் என்ன?

நான் கேவலமானவன்… சுயநலக்காரன்...!!!




24 July 2010, சனிக்கிழமை:


இனிய மாலை பொழுதில் நண்பனின் கைப்பேசி அழைப்பு...
“கமல், நாளைக்கு காலைல உதயதுல டிக்கெட் புக் பண்ணிருக்கேன்... வந்துரா”
"சரிடா... என்ன படம்”
“வாடா, என்ன சொன்ன தான் வருவியா? madarasappatinam.”
“கண்டிப்பா வாரேன்”
அதே சமயத்தில், இன்னொரு நண்பனின் குறுஞ்செய்தி –
“Dear mates, after watching movie, I’m going to take you all to a place. Pls do not ask where, but everyone has to come. Confirm me”
என் உதடுகளில் புன்சிரிப்பு. நான், என் நண்பர்களின் பகுதி அல்லவா, அவனுடைய விருப்பத்திற்கு இணைந்தேன், தலை அசைத்தேன்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நண்பர்களுடன் திரைப்படம் பார்க்க போகும் எண்ணமே என் மனதில் சந்தோசத்தை அள்ளி தெளித்தது.

இரவு உணவை உட்க்கொண்டு, சந்தோசத்துடன் உறங்கச் சென்றேன்.



25 July 2010, ஞாயிற்றுக் கிழமை:


சூரியன் தன் கண்களை திறக்க, பறவைகளின் இனிய கூச்சல்கள் என்னை தட்டி எழுப்ப, நண்பர்களை காணப்போகும் இனிய இன்பத்தில், கண்கள் விரிக்க, கடிகாரம் மணி 6ஐ காட்டியது.

நிதானமாக, மெல்லிசை கேட்டுக்கொண்டு தயாரானேன், மனதில் சின்ன பேராசை. தோழிக்கு அந்த ஆசையை, ஆங்கிலத்தில் குருஞ்செய்தியாக அனுப்பியும் வைத்தேன்.

குருஞ்செய்தி:
Can you sit beside me and your hand on my hand throughout… Only if you wish, I don’t like to make my kid uncomfortable nor force her – 25 July 2010, 8:31:19
நான் அவளின் விருப்பு, வெறுப்புகளை நினைவில் கொல்லாமல் செய்தியை அனுப்பி வைத்தேன். அவளின் எண்ணம், பதில் இரண்டையும் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டே காலை வேலைகளை செய்து முடித்துவிட்டு, தயாராகிக் கொண்டிருதேன்.

காது மிக கூர்மையாக தன் வேலையை செய்யும் முனைப்பில் காத்துக் கிடந்தது. பாவம் அதனால் தன் பணியை செய்ய இயலவில்லை. ஆம், திரையரங்கம் சென்று அடையும் வரையில் தன் பணியை செய்ய இயலவில்லை.

சின்ன ஏமாற்றம்.
சில குணங்களை எதிர்திடக் கூடாது, ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்ற எண்ணத்துடன் நானிருக்க... என் மீது எனக்கே சிரிப்பு, வெறுப்பு, கோபம், கலவையான உணர்வு, என்ன எது சிறு பிள்ளைத்தனமான ஆசை இதுவென்று?


திரையரங்கம்:
திரையரங்கம் சென்று அடைந்தேன். ஒவ்வொரு நண்பர்களாக திரையரங்கம் வந்தையடைய, உற்சாகம் பீரிட அரம்பதிதது, அனைவரின் முகத்திலும் உற்சாகம், களிப்பு...

திரை அரங்கினுள் அணைத்து தோழர், தோழிகளும் அமர, எதிர் பாரத விதமாக, என் குருஞ்செய்தியை பெற்ற என் அன்புத் தோழி என்னருகில்...

திரைப்படம் திரை இடப்பட, என்னை ஆர்வம், எதிர்ப்பார்ப்பு குடிக்கொண்டது. தோழியின் முகத்திலோ, செயலிலோ ஒரு மாற்றமும் தென்படவில்லை. என்னவென்று நான் நினைக்க?


தோழியிடம், நான் என் குருஞ்செய்தியை நினைவுப்படுத்த...

அவளின் முகத்தில், மெல்லிய புன்னகை, நான் மிகவும் ரசிக்கும் புன்னகை. அவளுக்கே உரிய அந்த அன்புச் சிரிப்புடன், அவள் தன் கைகளால், என் கைகளை பற்றிக்கொள்ள, திரையிலும் கதையின் நாயகி ஒரு படகோட்டி வசம் தன் கரங்களை நீட்டும் காட்சி...

ஆனந்தமான அதிர்ச்சி என்னுள், அவற்றை நான் ரசித்துக் கொண்டு...

சின்ன சின்ன தருணங்கள் தானே வாழ்க்கையின் ரசனையை கூட்டுகிறது, அப்படி ஒரு தருணம் தான் இது. ஆம், என் வாழ்வின் மிக சந்தோசமான, மரண நொடியிலும் நினைவில் திளைக்கும் தருணங்கள், மணித்துளிகள் இவை...

அந்த பிஞ்சுக் கைகளின் அரவணைப்பு, அன்புக்காகதான் நான் காத்துக் கிடந்தேன்.

உயிரின் பாசமெல்லாம் அந்த ஸ்பரிசத்தில் குவிந்து இருந்தது.

விடியும் வரை தெரியாது, நடந்தது கனவென்று, சந்தோசமும் அதுப்போலதான். அதை அனுபவிக்கும் போது தெரியாது.

மணித்துளிகள் நீண்டுகொண்டிருக்க, அனைவரும் திரையில் ஒன்றி இருந்தோம்.
என் கரமும், என் தோழியின் கரமும், இணைந்திருக்க அவள் தன் கைக்குட்டையால் எங்களின் இருவரின் வியர்வைத் துளிகளையும் மிக வாஞ்சையுடன் துடைத்து விட்டாள்.

நான், கல்லூரி பருவத்தில் என் கூடைபந்தட்ட பயிற்சியை முடித்துவிட்டு மிக சோர்வாக வீட்டினுள் நுழைந்து அம்மாவின் மடியினில் படுத்துக் கிடப்பேன், அப்போது, அம்மா மிக வாஞ்சையுடன் தன் புடவை முந்தானையால் என் முகத்தில் உள்ள வியர்வைத் துளிகளை துடைத்து விடுவாள்.

அதே நிகழ்வு, இப்போது நடந்து கொண்டிருந்தது.
நான், என்னை படைத்தவனிடம் இந்த அன்புக்கு, நிகழ்வுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன், நன்றியும் கூறினனேன்.

சந்தோஷம் நீண்டு கொண்டிருக்க, நண்பர்களுக்கு இடையில் குழந்தைத்தனமான செல்ல சண்டைகள்... மன இறுக்கம்.
எங்களின் கரம் பிரிய.... பிரிந்தது.
மீண்டும், அனைவரும் திரைப்படத்தில் கவனத்தை செலுத்த, என்னால் அச்செயலை செய்ய முடியவில்லை.

என் என்னோட்டதில் பல கேள்விகள்? விடை தெரியாமல்...

இடைவேளை, சரி இடைவேளைக்கு பிறகாவது, கரங்கள் இணையும் அன்று நம்பிக்கையில் காத்துக் கிடந்தேன்.

காலம் தானே, எல்லாவற்றிக்கும் சிறந்த மருந்து. மணித்துளிகளின் தொகுப்புதானே காலம். மணித்துளிகள் ஓட காத்துக் கிடந்தேன்.


இடைவேளையின் போது, டெல்லியில் இருந்து என் மாணவ நண்பனின் குருஞ்செய்தி என் கைப்பேசியை வந்து அடைந்தது.

குருஞ்செய்தி:
Kamal sir, Sorry as committed I couldn’t get you shadi by today. However, I make sure that you get it on or before 10 Aug.
ஆம், அவனிடம் என் அம்மாவுக்கும், தோழிகளுக்கும் அங்கு மட்டுமே கிடைக்கும் சேலை வாங்கி அனுப்பும் மாறு கேட்டுக்கொண்டிருந்தேன்.


ஏமாற்றம்... ஏமாற்றம்...

இந்த சின்ன ஏமாற்றத்தினை, தோழர், தோழிகளின் அருகாமை மங்கச் செய்து கொண்டிருந்தது.

நானும் அவளின் பிஞ்சுக் கைகளின் அரவணைப்பு, அன்புக்காக ஏங்கிக்கிடந்தேன்.
இடைவேளை முடிந்து, திரைப்படம் திரையிடப்பட, அனைவரும் அமர, எனக்கோ பெரிய ஏமாற்றம். என் தோழியின் அருகில் எங்கள் நட்புக் குழுவின் மற்றுறொரு நண்பன். அவர்களின் சந்தோஷத்தை களைக்க மனம் முன்வரவில்லை...

திரையில் என் கவனம் செல்லவில்லை, மணித்துளிகள் கரைந்து கொண்டிருந்து...
சிறிது நேரத்திற்கு பிறகு, திரையில் என் கவனம், கண்களை ஈர்த்தது...
கதையின் நாயகி, கதையின் நாயகனின் கை விரல்களை பெரிய மூங்கில் கொண்டு அடிக்கும் காட்சி.

வேதனையான அதிர்ச்சி என்னுள், கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது, கட்டுப்படுத்திக் கொண்டேன், யாரும் அறியாமல்.

திரைப்படம் முடிவு பெற...

அனைவரும், மூன்று சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் ஏறி அமர, என் அன்புத் தோழியின் ஆசையை நிறைவேற்றவே, நான் மட்டும் முன் இருக்கையில் ஏறி அமந்தேன்.

அவளுக்கு வேண்டுமானால் மறந்திருக்கலாம், ஆனால் நான் மறக்கவில்லை...!!!

அனைவரும், ஓர் உணவகம் சென்று அடைந்தோம், சந்தோஷமாக, கிண்டலுடன் மதிய உணவை உட்கொண்டோம்.
பின், நண்பனின் விருப்படி கோவில் செல்ல அனைவரும் ஆயத்தமாக, என்னால், அவர்களுடன் இணைய முடியவில்லை – மனதளவில்.
காரணம்: நான். என்னுடைய எதிர்ப்பார்ப்புகள், ஆசைகள், ஏமாற்றங்கள், நான் எவ்வளவு கேவலமானவன், சுயநலக்காரன்...

அவர்களின் மகிழ்ச்சி தொடர விரும்பினேன். அவர்கள் என் நண்பர்கள் அல்லவா? அவர்களின் மகிழ்ச்சியில் நான் திளைக்க விரும்பினனேன்.
ஆகையால், நான், நண்பனிடம்...

“நீங்க proceed பண்ணுங்க, நா rest எடுக்க போறேன்.”

அவனின் முகம் வாடியது, என்னால் தாங்கமுடியவில்லை, இதயம் கணத்தது. என் மீது வெறுப்பு, கோபம் என்னுடைய வார்த்தை என்னை நெருஞ்சி முள்ளாய் இதயத்தில் குத்தியது.

“வாடா, எல்லோரும் சேர்ந்து போவம், இல்லைனா யாரும் போக வேண்டாம்” என்றான் தோழன்.

நான், என்னை சீர்ப்படுத்திக் கொண்டேன். அனைவரும் ஒன்றாக கோவில் சென்று அடைந்து, மிக நிதனாமாக தரிசனம் காணப் பெற்றோம். தரிசனம் முடிந்து அனைவரும் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மாடிப்படியினில் அமர்ந்தோம்.

நான் மேலே அமர்ந்திருக்க என் காலடியில் என் தோழி அமர, நான் மனம் பேதலித்து போனேன். ஆம், அவள் அமர்ந்த விதம் என் அன்பு அக்காவை என் கண் முன் நிறுத்தியது.
நிகழ் காலத்தினுள் என்னால் சங்கமிக்க முடியவில்லை. என் எண்ணத்தின் ஓட்டத்தை நான் வார்த்தைகளால் கூறாமல் இருபினும், என் தோழி அதை கண்டுகொண்டாள். அவள் என் தோழி அல்லவா?

உடனே எழுந்தோம், கோவிலை விட்டு வெளி வந்தோம், அனைவரும் கை கோர்த்து நடக்க, நான் மட்டும், தனித்து விடப்பட்டேன், தனித்து இருந்தேன்.

புரிந்தது, எனது செயல்கள் என் நண்பர்களை காயப்படுத்தும் என்று, இருப்பினும் மாற்ற தவறினனேன். நான் எவ்வளவு கேவலமானவன், சுயநலக்காரன்...

பேரூந்து பிடித்து அனைவரும் அவர் அவர் தங்கும் இடம் வந்து அடைந்தோம்.
அதன் பிறகு, பல முறை நண்பர்கள் அனைவரும் சங்கமித்தோம், கைகள் கோர்த்து நடந்தார்கள், என்ன எனக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்க தவறியது. அதனால் என்ன? நான் காத்திருக்க தயாராகவே இருந்தேன்.... காத்தும் கிடந்தேன்.


28 August 2010, சனிக்கிழமை:

சரியாக ஒரு மாதம், மூன்று நாட்கள் கழித்து எனக்கு அந்த வாய்ப்பும் அமைந்தது; என் தோழி என் கரங்களை பிடித்து, இணைத்து, நடந்து சென்றாள்... சிறிது தூரம், சில மணித்துளிகள்...மூன்று நிமிடங்கள்....

அந்த மணித் துளிகளுக்காதானே, மூன்று நிமிடங்களுக்காதானே 33 நாட்கள் காத்துக் கிடந்தேன். என் மனதில் சந்தோஷம், இன்பம், மகிழ்ச்சி.... நான் எவ்வளவு கேவலமானவன், சுயநலக்காரன்...

சில மணித்துளிகளில் எங்கள் கரங்கள் பிரிந்தது. தங்கும் இடங்களுக்கு சென்று அடைய மூன்று சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அனைவரும் அமர, தோழியின் விருப்பத்தினை நிறைவேற்றும் கடமை என்னிடம்,

அவளுக்கு வேண்டுமானால் மறந்திருக்கலாம், ஆனால் நான் மறக்கவில்லை...!!!

நான் முன் இருக்கையில் ஏறி அமர்ந்தேன்.

அனைவரும் மகிழ்ச்சியாக அவர் அவர் தங்கும் இடங்கள் வந்து அடைந்தோம். என் அறையை நான் அடைந்த பிறகு, நடந்த நிகழ்வுகளை திரும்பி பார்க்க...

எங்கோ படித்த வாசகம் என் நினைவில் வந்து ஓடியது...

“நீ தேடும் ஒருவர் உன் தேடலில் கிடைபதில்லை, உன்னைத் தேடும் ஒருவரையோ நீ திரும்பி கூட பார்ப்பதில்லை – இதுதான் வாழ்க்கை “

அதே சமயம் என் செவிகளை வந்து அடைந்த பாடல் வரிகள்...
(கவி நான் செய்த சிறு திருத்தத்திற்கு மன்னிப்பாராக...)

"சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாள் இல்லையே...
துக்கம் சில நேரம் பொங்கி வரும் போதும்
மக்கள் (நண்பர்கள்) மனம் போலே பாடுவேன் (நான் இருப்பேன்) கண்ணே...
என் சோகம் என்னோடு தான்...”


ஆம், எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் இவை.....

Monday, July 26, 2010

Who is a leader?




A leader is best when people barely know he exists not so good when people obey and acclaim him. But of a good leader, who talks very little when his work is done, his aim fulfilled,
They say : We did it ourselves.
- Lao Tzu



யாரோ சிரமப்பட்டு அழைத்துச் செல்லும் பாதையில் செல்பவன் தலைவன் அல்ல, தானே பாதைகள் அமைத்து, தானே முதலில் சென்று வலிகடுபவன் தான் தலைவன்......



ஒருவனுடைய சிறந்த நண்பர்கள் அவனுடைய பத்து விரல்கள் தான் – ஆர். கோலியர்.

Monday, June 28, 2010

படித்ததில் கவர்நதது....!!!

பிறப்பால் வருவது யாதெனக் கேட்டேன்; பிறந்து பாரென இறைவன் பணித்தான்; இறப்பால் வருவது யாதென கேட்டேன்;இறந்து பாரென இறைவன் பணித்தான்' மனையாள் சுகமெனில் யாதெனக்கேட்டேன்;மணந்து பாரென இறைவன் பணித்தான்;அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்; ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அனுபவம் என்பதே நான்தான் என்றான்.....


கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல் - சுவாமி விவேகானந்தர்.



"மற்றவர்களுக்கு மண்டியிட்டு வாழ்வதை விட நான் நிமிர்ந்து நின்றே சாவேன்" - சே குவேரா.


எப்பொழுதும் மிக எளிதானதாகவே இருந்திருக்கின்றது இளகிய மனங்களை ஏமாறச் செய்வதென்பது......

Wednesday, May 19, 2010

ஏ(ன்)மாற்றம்...!


ஓய்வு நாளின் இனிமையான பின் இரவு, தோழியுடன் தொலைப்பேசி உரையாடல், மனதில் இன்பத்தை இறைத்து இருந்தது. அந்த இன்பம் முடிவில்லாமல் தொடர வேண்டும் என்னும் பேராசை என் மனதில். அவளை பார்க்க வேண்டும் என்னும் எண்ணம்.
அவளிடம் " உன்ன பார்க்கணும் போல இருக்கு, நாளைக்கு பார்க்க முடியுமா?"
அவள், அவளுக்கே உரிய மென்மையுடன், அன்புடன், " வாடா, நாளைக்கு evening பார்க்கலாம்".
அவளுடைய வார்த்தைகள் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது.

பின்பும் எங்களுடைய தொலைப்பேசி உரையாடல் தொடர்ந்தது.

அந்த நாளின் மாலை நேரத்தை மாற்ற முடியாத நாளாக மாற்ற நினைத்தேன். அவளுடன் பல விஷயங்களை மனதார பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
அவளை பார்க்கும் நொடிகளை நினைத்து பார்க்கும் போது, மனதில் இன்பம் குடிகொண்டது. அந்த இன்பம் என் காலை பொழுதை மிக இன்பமாக மாற்றி இருந்தது.

வெயிலின் கடுமை, வியர்வைத் துளிகள், ரயில் பயணம், சக பயணிகளின் செயல்கள், அலுவலக பணிகள், எல்லாம்.. எல்லாமே இன்பம் அளித்தது. இன்பம் அளித்துக்கொண்டு இருந்தது.

என் மனம் துள்ளி குதித்தது, காரணம், என் தோழியை சந்திக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

எனக்கு ஆச்சர்யம், ஒருவரின் சந்திப்பு இவ்வளவு சந்தோஷத்தை அளிக்க முடியுமா? - "முடியும்" என்றே பதில் அளித்தது என் மனம்.

கைபேசி சிணுங்கியது. தோழியின் குறுந்தகவல் - "Kamal. I'm sorry. I could not come today. Meet you on some other day".

என் முகத்தில், புன்ருவல் - விரக்தியுடன்.

அலுவலக பணிகள் பாரமானது, வியர்வைத் துளிகள், ரயில் பயணம், சக பயணிகளின் செயல்கள் அனைத்தும் இயந்திரத்தனமாய் தெரிந்தது.
காலைப் பொழுதில் சந்தோஷத்தை அளித்த அச்செயல்கள்... இப்போது!?

முன் இரவில் அவளுடைய தொலைப்பேசி அழைப்பை எதிர்பார்த்து காத்துகொன்டிருந்தேன்...

" எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தால் ஏமாற்றம் அதிகமாக இருக்குமாம் " - எங்கோ படித்த வாசகம் என் நினைவில் தோன்றியது.

சிந்தித்தேன், செயல்கள் அனைத்தும் ஒன்றே, எல்லாம் நாம் பார்க்கும் விதத்தில்...

" If you understand, things are just as they are; if you do not understand, things are just as they are..." ஜென் பழமொழி.

மேலும்... " மறக்க படும் அன்பும், மறுக்க படும் அன்பும் மரணத்தை விட கொடுமையானது...!!! "

Monday, April 26, 2010

எனக்கு நட்பு, தோழமை, சிநேகிதம் பிடிக்கும்...!!!




நட்பு, நண்பர்கள்...
தோழமை, தோழர்கள்...
சிநேகிதம், சிநேகிதர்கள்...
எனக்கு நட்பு, தோழமை, சிநேகிதம் பிடிக்கும்...!!!

அலுவல் தந்த அசதி, நிறைவான தூக்கம் வேண்டி தூங்க சென்றேன்... புரண்டு படுத்தேன்... மறுநாள் அலுவலக பணிகள் என் கண் முன்...

காலைப் பொழுது தன்னுள் பல பொக்கிஷங்களை, சுவாரசியங்களை, எதிர்ப்பார்ப்புகளை, இன்பங்களை, துன்பங்களை, அடக்கிக் கொண்டு இனிதாய் மலர, அலுவலகம் செல்ல வேண்டும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், மின் அஞ்சல் அனுப்ப வேண்டும், என்கிற இயந்திரத்தனமான எண்ணங்களோடு கண்கள் விழிக்க...

கைப்பேசி தன் பணியை தொடங்கியது. சிணுங்கியது.

"டேய் கமல், ஈவ்னிங் 6 மணிக்கு பெசன்ட் நகர் பீச் வாடா , நம்ம பிரிஎண்ட்ஸ் எல்லோரும் வாராங்க " என்றாள் மிக உரிமையோடும், அன்போடும், புத்துணர்ச்சியோடும் என் தோழி.

நான்: " ஏன்? என்ன விஷேசம்? "

இடைமறித்து அவள் : " வாடா, காரணம் சொன்னால்தான் வருவியா!?. கரெக்டா, கவனமா வந்து சேரு".

அவள் கூறிய விதம், உரிமை கொண்ட விதம், அன்பு கொண்ட விதம், என் தாயை நினைவுப் படுத்தியது.

அவளுடய புத்துணர்ச்சி என்னையும் தொற்றிக்கொள்ள, வழக்கம் போல் இல்லாமல், என் ரயில் பயணம் ரசிப்புத்தன்மையுடன் அமைந்தது.
கைக்குழந்தையின் புன்சிரிப்பு, உடல் ஊனமுற்றவரின் தன்னம்பிக்கை, கல்லூரி மாணவர்களின் கிண்டல் பேச்சுக்கள், வேலை இல்லா பட்டதாரியின் எதிர்பார்ப்பு அனைத்தும், என்னை உற்சாகப்படுத்தியது. மிக சீக்கிரமாக அலுவலகம் சென்று அடைந்தேன்.

என் அலுவல்களை செய்ய முற்பட்டேன், என்னுடைய உற்சாகம் என் அலுவலக நண்பர்களையும் தொற்றிக்கொள்ள வேலைகள் அனைத்தும் கொண்டாட்டமாக மாறியது. எல்லாம் நட்பு, நண்பர்களால் விளைந்த செயல்.

மாலை 6 மணி, பெசன்ட் நகர் பீச், நண்பர்கள் அனைவரும் சங்கமிக்க, நட்பு மிளிர, சூரியன் பின் வாங்கியது.
கடல் அலை ஆர்பரித்தது, எங்கள் நட்பு கூட்டணியுடன் போட்டியிட்டது. பாவம், முடியாமல் கடல் அலையும் பின் வாங்கியது.

அனைவரும், ஓர் உணவகத்தில் வட்டமாக அமர்ந்து இரவு உணவை சாப்பிட ஆரம்பித்தோம். நட்பு எவ்வித தடைகளையும், ஆச்சாரங்களையும் பார்ப்பதில்லை. ஒருவர், மற்ற நண்பர்களின் எச்சில் தட்டுகளில் இருந்த உணவை மிக உரிமையோடு எடுத்து உட்கொண்டோம்.
எனக்கு என் பள்ளிகூட, கல்லூரி வாழ்க்கை நினைவில் தோன்றியது.

பேரூந்தில் அணைத்து நண்பர்களும் சேர்ந்து அமர, நானும் என்னுடைய மற்றொரு தோழியும் உட்கார இடம் தேடிப் பார்க்க...
அப்போது, எங்கள் சமவயதொத்த ஒருவன் எங்களுக்கு இடம் அளித்தான். அவன், எங்கள் நட்பை புரிந்து கொண்ட விதம், மதித்த விதம், எனக்கு மகிழ்ச்சி அளித்தது. மேலும், எங்களின் செயல் அவனது நண்பர்களை நினைவூட்டியது போலும், அவனது கண்களில் உள்ள ஏக்கம் அதைப் பறைசாற்றியது.


வீடு வந்து சேர்தேன், அலுவல் தந்த அசதி, நண்பர்கள் தந்த அளவற்ற மகிழ்ச்சி, மனதை மென்மையாக்கிருந்தது.
மன மகிழ்ச்சியோடும், நிறைவுடனும், நிறைவான தூக்கம் வேண்டி, தூங்க சென்றேன்... தூங்கினனேன். தூங்கிக் கொண்டிருகிறேன்........நட்புடன்!!!

Friday, April 23, 2010

எண்ணங்கள்...!!!


அன்பு தோழர்களே...

இனிய நிகழ்வுடன் என்னுள் திளைக்கின்ற தோழர்களுக்கு....



சித்திரை மாதம், ஞாயிற்றுக் கிழமை, மதிய நேரம், சுட்டெரிக்கும் வெயில், வெப்பத்தின் கடுமை, இருபினும் என் முகத்தில் ஓர் குளுமை, புத்துணர்ச்சி, சந்தோஷம், காரணம்!? நண்பர்கள்... நண்பர்கள்... நண்பர்கள்...

தோழியின் பிறந்தநாள் நினைவாக கேக் வெட்ட வேண்டும் என்ற இனிய நிகழ்வோடு ஆரம்பானது எங்கள் நட்பின் கூட்டணி, ஓர் பூங்காவில். கிண்டல் பேச்சுக்கள், வேடிக்கையான சீண்டல்கள், பரிசுகள் பரிமாற்றம், அன்பின் பொழிவு, நண்பர்களுடன் சேர்ந்து அந்த நில ஒளியில் உட்கொண்ட கூடஞ்ச்சொறு, நட்பு தருவித்த மகிழ்ச்சி, சாதாரண ஞாயிற்றுக் கிழமையை என்றும் பசுமையான அசாதாரமான நாளாக மாற்றியது.

எங்கும் நட்பு, நண்பர்கள், நண்பர்கள் தருவித்த மகிழ்ச்சி. அனைவரும் மிக மகிழ்ச்சியாக விடை பெற, நான் மட்டும் தனியாக...

என் என்னோடத்தில் சில கேள்விகள்?
நம் நட்பு இதே போன்று மாறாத நட்புடன் எதிர்காலத்தில் திளைக்குமா?
நம் ஆண்-பெண் பால் அற்ற நம் நட்பைப் பற்றி மற்றவர்களின் கருத்து?
என் படைப்பின் பொருள் இதுவோ?
இதே நட்பின் மகிழ்வோடு என் இறப்பு நிகழ்தால் என்ன?

அப்போது, என்னை கடந்து சென்ற மூன்று சக்கர வாகனத்தின் வாசகம் என் என்னோட்டதை இடறியது...

வாசகம்: இதுவும் கடந்து போகும்...!!!

Monday, April 19, 2010

உழைப்பு - என் கண்ணோட்டத்தில்...!!!

கடுங்குளிரில் அமர்ந்து, இரவெல்லாம் மெழுகுவர்த்தி ஒளியில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த ரூசோ சாதாரண உழைப்பால் அல்ல; உழைப்பின் சிகரம். உழைப்பு... உழைப்பு, உழைப்பதே உன் குறிக்கோளாய் இருக்கட்டும்.


"மேதைதனத்தின் தாயே உழைப்புதான்" என்கிறார் பர்கர்.
"காலத்தை வீணாக்குவதற்கு கடிகாரம் என்னை கண்டிக்கிறது" என்கிறார் ஷேக்ஸ்பியர்.

உழைப்பின் சிறப்புக்கு காலம் ஓர் வரைகோல். காலத்தின் சிறப்பை உணர்த்த ஓர் மேதை சொன்னான் "நாளை வாழ்வேன் என்பவன் அறிவிலி, இன்று வாழ எண்ணுவது கூடக் காலம் கடந்த எண்ணமே, நேற்றே வாழ்த் தொடங்கியவன் தான் அறிவாளி", என்று, நம் வலிமை, நாம் ஈடுக்கொடுக்கும் எதிர்ப்பின் அளவு விகிதத்தில் தான் இருக்கிறது. ஆதலின் வலிமையை விலை பேசும் கடமைக்கு செவி சாய்த்து, உரிய நேரத்தில் தொடங்கி, உன்னத உழைப்பால் உயர்வான வாழ்வினைப் பெறலாம்...!!!

Tuesday, March 23, 2010

நான் செய்யும் செயல்


படித்து கொண்டிருக்கும் புத்தகம்: தண்ணீர் தேசம்
ஆசிரியர்: கவிஞர் வைரமுத்து

இப்புத்தகத்தை பற்றிய என் எண்ணங்கள் விரைவில்... எழுத்துகளாக இந்த இணையத்தில்...

Sunday, March 7, 2010

படித்ததில் பிடித்தது...!!! - 3

படித்ததில் பிடித்தது...!!!

புத்தகம்: குருவாசகம்
வெளியீடு: ஆனந்த விகடன்
ஆசிரியர்: சுபா

1. தேடல் உங்களுக்குள் தீவிரமாகும் போது, உங்கள் இதயம் உண்மையாகவே கதறும்
போது, அறியாமையின் வலி உண்மையில் அதிகம் ஆகும்போது, வலியை உங்களால்
தாங்கமுடியாதபோது... கிடைக்கிறார் குரு...!

2. உங்களை ஆறுதலடையச் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் நிம்மதியாக
உறங்குவது முக்கியம் அல்ல. விடியலில் வெளிச்சத்தைப் பார்பதுதான் முக்கியம்...!

3. உங்களால் இயலாத ஒன்றைச் செய்யவில்லை எனில் ஒரு பிரச்னையும் இல்லை.
உங்களால் முடியக்கூடிய ஒன்றைச் செய்யாமல் விடுவதுதான் துயரமான ஒன்று...!

4. தீவிரமாய் உழைபவனுக்குதான் ஓய்வின் உண்மையான அர்த்தம் புரியும்...!

5. மற்றொரு மனிதனைக் கொல்வதுதான் வன்முறை என்று நினைக்காதீர்கள். நீங்கள் உயிர்
வாழ்வதற்கு அவசியமான அளவுக்கு மேல் எந்த உயிர் அழிக்கபடலும் அதுவும்
வன்முறையே...!

Friday, March 5, 2010

படித்ததில் பிடித்தது...!!! - 2

படித்ததில் பிடித்தது...!!!


மண்ணோடு புதையும் வரை நெஞ்சோடு வைத்திருப்பேன் உன் நினைவுகளை.என்னை எரித்தாலும் மிஞ்சும் உண் நினைவுகள்...!!!


பொறுத்தது போதும் பொங்கி எழு - ஒரு
புழுவென வாழ்ந்தது போதும்
வெறியர்கள் ஆட்சி வீழ்ந்திடவே - நீ
எரிமலையாகவே மாறிவிடு!!!


கொலை வாளினை எடடா
கொடியோர் செயல் அறவே...
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை
வேரோடு சாய்வோம் - பாரதிதாசன்


சோர்ந்து விட்ட மனிதன்
தனக்குத் தானே பகைவன்;
துணிந்து விட்ட மனிதன்
சாவுக்கு பகைவன்.


பயந்தவனக்கு உலகம் வழிபாட்டுப் பொருள்;
துணிந்தவன் உலகிற்கு வழிபாட்டுப் பொருள்...!



பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்:
1. மானம் 2. குலம் 3. உயர்ச்சி 4. கல்வி 5. வன்மை
6. அறிவுடைமை 7. தானம் 8. தவம் 9. தாளாண்மை 10. காமுறுதல்
- ஔவையார்

Thursday, February 25, 2010

படித்ததில் பிடித்தது...!!! - 1

படித்ததில் பிடித்தது...!!!



நேற்றைய வரலாறு தெரியாது போனால், இன்று நடப்பது புரியாமல் போகும். இன்று நடப்பது புரியாமல் போனால் நாளை என்பது நம் வசம் இல்லை.


புரட்சியாளனைச் சிறைப்பிடிக்கலாம், புரட்சியைச் சிறைப்பிடிக்க முடியாது...!!!


ஆழ்ந்த சிந்தனை - ...பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதி இன் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம். இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகிறான்...!


இலட்சியத்தால் ஒன்றுபட்ட, எழுச்சி கொண்ட, மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது...! இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி...!


உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே...! - சே

நண்பர்கள் இல்லாத வாழ்க்கை, சாட்சி இல்லாத மரணத்துக்குச் சமம்...!!!

Monday, February 1, 2010

புரட்சி...!!!

இந்தப் போர் எங்களோடு தொங்கவும் இல்லை, எங்களோடு முடியவும் இல்லை...!!! - பகத் சிங்

இறந்தகாலத்க்கும் வரும்காலத்க்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி...!!! - பிடேல் காஸ்ட்ரோ

சோம்பல் முறிக்க உயர்ந்த கரங்கள் சுரண்டலை முறிக்க எழும்போது கடவுளின் தூக்கம் கலையலாம்...!