
அன்பு தோழர்களே...
இனிய நிகழ்வுடன் என்னுள் திளைக்கின்ற தோழர்களுக்கு....
சித்திரை மாதம், ஞாயிற்றுக் கிழமை, மதிய நேரம், சுட்டெரிக்கும் வெயில், வெப்பத்தின் கடுமை, இருபினும் என் முகத்தில் ஓர் குளுமை, புத்துணர்ச்சி, சந்தோஷம், காரணம்!? நண்பர்கள்... நண்பர்கள்... நண்பர்கள்...
தோழியின் பிறந்தநாள் நினைவாக கேக் வெட்ட வேண்டும் என்ற இனிய நிகழ்வோடு ஆரம்பானது எங்கள் நட்பின் கூட்டணி, ஓர் பூங்காவில். கிண்டல் பேச்சுக்கள், வேடிக்கையான சீண்டல்கள், பரிசுகள் பரிமாற்றம், அன்பின் பொழிவு, நண்பர்களுடன் சேர்ந்து அந்த நில ஒளியில் உட்கொண்ட கூடஞ்ச்சொறு, நட்பு தருவித்த மகிழ்ச்சி, சாதாரண ஞாயிற்றுக் கிழமையை என்றும் பசுமையான அசாதாரமான நாளாக மாற்றியது.
எங்கும் நட்பு, நண்பர்கள், நண்பர்கள் தருவித்த மகிழ்ச்சி. அனைவரும் மிக மகிழ்ச்சியாக விடை பெற, நான் மட்டும் தனியாக...
என் என்னோடத்தில் சில கேள்விகள்?
நம் நட்பு இதே போன்று மாறாத நட்புடன் எதிர்காலத்தில் திளைக்குமா?
நம் ஆண்-பெண் பால் அற்ற நம் நட்பைப் பற்றி மற்றவர்களின் கருத்து?
என் படைப்பின் பொருள் இதுவோ?
இதே நட்பின் மகிழ்வோடு என் இறப்பு நிகழ்தால் என்ன?
அப்போது, என்னை கடந்து சென்ற மூன்று சக்கர வாகனத்தின் வாசகம் என் என்னோட்டதை இடறியது...
வாசகம்: இதுவும் கடந்து போகும்...!!!
No comments:
Post a Comment