Monday, April 19, 2010

உழைப்பு - என் கண்ணோட்டத்தில்...!!!

கடுங்குளிரில் அமர்ந்து, இரவெல்லாம் மெழுகுவர்த்தி ஒளியில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த ரூசோ சாதாரண உழைப்பால் அல்ல; உழைப்பின் சிகரம். உழைப்பு... உழைப்பு, உழைப்பதே உன் குறிக்கோளாய் இருக்கட்டும்.


"மேதைதனத்தின் தாயே உழைப்புதான்" என்கிறார் பர்கர்.
"காலத்தை வீணாக்குவதற்கு கடிகாரம் என்னை கண்டிக்கிறது" என்கிறார் ஷேக்ஸ்பியர்.

உழைப்பின் சிறப்புக்கு காலம் ஓர் வரைகோல். காலத்தின் சிறப்பை உணர்த்த ஓர் மேதை சொன்னான் "நாளை வாழ்வேன் என்பவன் அறிவிலி, இன்று வாழ எண்ணுவது கூடக் காலம் கடந்த எண்ணமே, நேற்றே வாழ்த் தொடங்கியவன் தான் அறிவாளி", என்று, நம் வலிமை, நாம் ஈடுக்கொடுக்கும் எதிர்ப்பின் அளவு விகிதத்தில் தான் இருக்கிறது. ஆதலின் வலிமையை விலை பேசும் கடமைக்கு செவி சாய்த்து, உரிய நேரத்தில் தொடங்கி, உன்னத உழைப்பால் உயர்வான வாழ்வினைப் பெறலாம்...!!!

No comments:

Post a Comment